மண் கடத்தல் விவகாரத்தில் 4 பேர் கைது !

மண் கடத்தல் விவகாரத்தில் 4 பேர் கைது !

காவல்

பஞ்சப்பள்ளி அருகே பாளையம் கிராமத்தில் அனுமதி இன்றி ஆற்றில் மண் அள்ளிய நபர்கள் கைது பொக்லைன் மற்றும் டிராக்டர் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் பஞ்சப்பள்ளி காவலர்கள் பாளையம் கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது சனத்குமார் ஆற்றின் அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் 2 டிராக்டரில் நொரம்பு மண் அள்ளுவது தெரியவந்தது. இதையடுத்து காவலர்கள் அங்கு சென்று டிரைவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் கொக்கிக்கல் கிராமத்தை சேர்ந்த டிராக்டர் உரிமையாளர் முருகன் , டிரைவர்கள் சேகர் ,சுகந்திரன்,கிரி ஆகியோர் , அனுமதியின்றி மண் அள்ளி கடத்தியதும் தெரிய வந்தது. இதையடுத்த அவர்கள் 4 பேரையும் பஞ்சப்பள்ளி காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் 2 டிராக்டர்கள், பொக்லைன் எந்திரம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story