கம்மாபுரம்: மணல் கடத்திய 4 மாட்டு வண்டி பறிமுதல்

கம்மாபுரம்: மணல் கடத்திய 4 மாட்டு வண்டி பறிமுதல்

மணல் கடத்திய மாட்டுவண்டிகள் பறிமுதல்

கம்மாபுரம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த போது மணல் கடத்தலில் ஈடுப்பட்ட மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்தனர்
கடலூர் மாவட்டம் கம்மாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா தலைமையிலான காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 4 மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி - வந்தவர்களை காவல் துறையினர் மறித்தனர். போலீசாரை பார்த்ததும் பேரும் மாட்டு வண்டிகளை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர். தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணை யில் சொட்டவனம் மணிமுக்தாற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 4 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்த காவல் துறையினர் தப்பி ஓடியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story