குடியாத்தம் அருகே 4 கிலோ கஞ்சா பறிமுதல்

குடியாத்தம் அருகே 4 கிலோ கஞ்சா பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா

குடியாத்தம் அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம்,குடியாத்தம் வழியாக ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தப்படுவதாக வந்த புகார்களின் பேரில் மாவட்ட எஸ்பி மணிவண்ணன் உத்தரவின் பேரில் குடியாத்தம் துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் மேற்பார்வையில்,

குடியாத்தம் தாலுகா இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயந்தி, பழனிவேலு உள்ளிட்ட போலீசார் தமிழக- ஆந்திர மாநில எல்லையோரம் உள்ள சைனகுண்டா போலீஸ் சோதனை சாவடி அருகே நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக நடந்து வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தபோது அவர் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரிய வந்தது.

அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அஸ்சாம் மாநிலம் ஜிப்ரூ மாவட்டம் காசூராகோய்ன் பகுதியைச் சேர்ந்த மங்கள் மாஜி (35) என தெரியவந்தது.

பின்னர்,அவரை போலீசார் கைது செய்து, 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story