தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது!

தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது!

பைல் படம் 

கீரனூர் அருகே உள்ள கிள்ளுக்கோட்டையை சேர்ந்த கூலித்தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கீரனூர் அருகே உள்ள கிள்ளுக்கோட்டையை சேர்ந்தவர் சின்னதுரை(45). கூலித்தொழிலாளி. இவருக்கும் அதே ஊரை சேர்ந்த குமார் என்பவருக்கும் இடையே கடந்த 2016ம் ஆண்டு நடந்த கொலை சம்பவம் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 14ம் தேதி நள்ளிரவு கிராமத்தில் உள்ள வனத்துர்க்கை அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு சுவாமி ஊர்வலம் நடந்தது. இதில் இதில் கலந்து கொண்ட சின்னதுரைக்கும், குமாருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த குமார் அவரது சகோதரர்கள் முத்துகருப்பன், துரை வெங்கடேஷ் மற்றும் குமார் மகன்கள் கபில்தேவ், சந்தானபாரதி ஆகியோர் சேர்ந்து சின்னதுரை தரப்பினரை தாக்கினர்.

மேலும் கத்தியால் குமார் குத்தியதில் படுகாயமடைந்த சின்னதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது தொடர்பாக உடையாளிப்பட்டி போலீசார் வழக் குப்பதிந்து குமாரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்நிலையில் வழக்கில் தொடர்புடைய முத்துக்கருப்பன், துரை வெங்கடேஷ், கபில்தேவ், சந்தானபாரதி ஆகிய 4 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வர்கள் கீரார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags

Next Story