தொழிலாளியை மிரட்டி பணம் பறித்த 4 பேர் கைது

தொழிலாளியை மிரட்டி பணம் பறித்த 4 பேர் கைது

பணம் பறித்த 4 பேர் கைது

கரட்டூர் பகுதியில் தொழிலாளியை மிரட்டி பணம் பறித்த 4 பேர் கைது. போலீசார் வழக்குப்பதிவு
சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்தவர் மதன் (வயது 20). செவ்வாய்பேட்டை லீ பஜாரில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று இரவு வேலையை முடித்துவிட்டு நண்பர் ஒருவரை மணியனூர் பகுதியில் விடுவதற்காக மொபட்டில் சென்றார். அப்போது கொண்டலாம்பட்டியில் இருந்து சீலநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் பிள்ளையார் நகர் கரட்டூர் பகுதியில் சென்றபோது மொபட்டை நிறுத்திய 4 பேர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.3 ஆயிரம், மொபட், செல்போனை பறித்தனர். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசில் மதன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியனூரை சேர்ந்த பூவரசன் (20), சுதாகர் (19), ரவீந்தர் (22) மற்றும் ஏற்காட்டை சேர்ந்த நந்தகுமார் (22) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

Tags

Next Story