தூத்துக்குடியில் ஆட்டோ டிரைவரை மிரட்டி பணம் பறித்த 4பேர்கள் கைது

தூத்துக்குடியில் ஆட்டோ டிரைவரை மிரட்டி பணம் பறித்த 4பேர்கள் கைது

கோப்பு படம் 

தூத்துக்குடியில் ஆட்டோ டிரைவரை கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த 4பேரை போலீசார் கைது செய்தனர்.  

தூத்துக்குடி முத்தையாபுரம் தோப்பு தெருவைச் சேர்ந்தவர் சின்ன குட்டி மகன் ஆறுமுக நயினார் (23), இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார். நேற்று டி. சவேரியார் புரத்தில் பயணிகளை இறக்கிவிட்ட பின்னர் முத்தையாபுரம நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழி மறித்தனர். மேலும் கத்தியை காட்டி விரட்டி அவரிடம் இருந்த ரூ.12 ஆயிரம் பணத்தை பறித்து சென்று விட்டார்களாம்.

இந்த சம்பவம் குறித்து ஆறுமுக நயினார் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், பொட்டல்காடு கிராமத்தை சேர்ந்த செல்வம் மகன் முருக பிரசாத் (24), மகேந்திரன் மகன் தனுஷ் (24), இசக்கி மகன் அஜித்குமார் (26), பெரியசாமி மகன் சதீஷ் (19) ஆகிய 4பேரும் பணத்தை பறித்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் 4பேரையும் கைது செய்து, பணத்தையும் பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமாக இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story