மதுபாட்டில், சாராயம் விற்பனை 4 பேர் கைது

மதுபாட்டில், சாராயம் விற்பனை 4 பேர் கைது

கைது

சின்னசேலம் பகுதியில் மதுபாட்டில், சாராயம் விற்பனை 4 பேர் கைது.
சின்னசேலம் பகுதியில் மதுபாட்டில் மற்றும் சாராயம் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். சின்னசேலம் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் கடந்த 16ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, நைனார்பாளையம் பெட்டிக்கடையில், சின்னசேலத்தை சேர்ந்த சுப்ரமணியன் மகன் சத்யநாராயண மூர்த்தி,43; ராயப்பனுார் ஏரிக்கரையில் அதே பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் மகன் பாலகிருஷ்ணன்,55; தொட்டியம் டாஸ்மாக் கடை அருகே, பைத்தந்துறையை சேர்ந்த சேகர் மகன் சேதுபதி,20; ஆகியோர் மதுபாட்டில் விற்றது தெரிந்தது. தொடர்ந்து, 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 34 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல், சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மேற்கொண்ட சோதனையில் செல்லியம்பாளையம் ஓடை அருகே சாராயம் விற்ற மேல்நாரியப்பனுாரை சேர்ந்த பொன்னுசாமி மகன் முத்துசேண்டி,60; என்பவரை கைது செய்து, 10 லிட்., சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story