ரூ.2 லட்சத்துக்கு பச்சிளம் குழந்தையை விற்ற 4 பேர் கைது!

ரூ.2 லட்சத்துக்கு பச்சிளம் குழந்தையை விற்ற 4 பேர் கைது!

ஜோலார்பேட்டையில் பச்சிளம் குழந்தையை ரூ. 2 லட்சத்துக்கு விற்பனை செய்த நான் கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஜோலார்பேட்டையில் பச்சிளம் குழந்தையை ரூ. 2 லட்சத்துக்கு விற்பனை செய்த நான் கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே மாக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகிரி மனைவி இந்துமதி(25). இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். சிவகிரி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். தற்போது இந்துமதி ஆம்பூரில் உள்ள தனியார் ஷூ கம்பெனி ஒன்றில் வேலை செய்து தனது பிள்ளைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும், சின்ன மூக்கனூர் கிராமத்தை சேர்ந்த ஜீவா(23). தனியார் பள்ளி வாகன டிரைவர். என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் கள்ள காதலாக மாறி கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். இதற்கிடையில் இந்துமதி கற்பமானார்.இதனால் யாருக்கும் தெரியாமல் நாட்றம்பள்ளியில் தனி குடுத்தனம் நடத்தி வந்தனர். இதனைதொடர்ந்து இந்துமதிக்கு கடந்த செப்டம்பர் மாதத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. தனக்கு குழந்தை பிறந்ததை அறிந்தால் எங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தன்னை ஒதுக்கி வைத்து விடுவார்கள் என்ற அச்சத்தில் இந்துமதி தவித்தார். அதே நேரத்தில், பிறந்த குழந்தை தமக்கு வேண்டாம் வேறு யாராவது குழந்தை இல்லாதவர்களுக்கு கொடுத்து விடலாம், பிறகு நாம் முறைப்படி திருமணம் செய்து கொண்டு வாழலாம் என ஜீவா இந்துமதியிடம் வலியுறுத்தி வந்தார்.

அதற்கு இந்துமதி முழு சம்மதம் தெரிவிக்காத நிலையில், ஜூவாவிற்கு ஏற்கனவே அறிமுகமான கந்திலி அருகே கெஜல்நாயக்கன்பட்டியை சேர்ந்த சென்றாயன் மனைவி பப்பி(30), தோரணம்பதியை சேர்ந்த மணிகண்டன்(34), ஆகியோர் மூலம் நாட்றம்பள்ளியை சேர்ந்த கலைச்செல்வன்(47). என்பவருக்கு, பிறந்து 15 நாட்களே ஆன குழந்தையை ரூ.2 லட்சத்துக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. குழந்தை விற்ற ஒரு சில நாட்களிலேயே இந்துமதிக்கும், ஜீவாக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. குழந்தையை மீட்டு தாருங்கள் என ஜீவாவிடம் இந்துமதி பலமுறை வற்புறுத்தி வந்தார். ஆனால் ஜீவா அதற்கு செவி சாய்க்கவில்லை.

இதனால் விரக்தியடைந்த இந்துமதி இது குறித்து ஜோலார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில், தனிப்படை அமைத்து இதில் சம்பந்தப்பட்டவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி ஜீவா, பப்பி, மணிகண்டன் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகிய நான்கு பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். முன்னதாக கலைச்செல்வனிடம் இருந்த குழந்தையை போலீசார் மீட்டு இந்துமதியிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story