ஈசநத்தம் மயான பகுதியில் சூதாடிய 4பேர் கைது

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈசநத்தம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசிற்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் ஈசநத்தம் பகுதியில் நவம்பர் 19ஆம் தேதி மாலை 5 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டார் திருநாவுக்கரசு.

அப்போது, அப்பகுதியில் உள்ள மயானம் அருகே பணம் வைத்து சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது.. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை நொச்சிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராம்குமார் வயது 80, அருகே உள்ள சேர்வைக்காரன் பட்டியைச் சேர்ந்த கண்ணன், கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, மஞ்ச நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த லோகநாதன்,

அரவக்குறிச்சி தாலுகா, ஈசநத்தம் புதூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52சூதாட்டைகளையும், ரூ.200-ஐ பறிமுதல் செய்தனர். பின்னர் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவர்களை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

Tags

Next Story