தெரு நாய்கள் கடித்ததால் 9 மாத குழந்தை உட்பட 4 பேர் காயம்

திருப்பூர், சோளிபாளையத்தில் தெரு நாய்கள் கடித்ததால் 9 மாத குழந்தை உட்பட 4 பேர் காயம் காயமடைந்தனர்.
திருப்பூர் மாநகராட்சி உட்பட்டு 60 வார்டுகள் உள்ளது. இந்நிலையில் மாநகராட்சி பகுதியில் தெரு நாய்கள் தொல்லை உள்ளதாகவும், இதனை கட்டுப்படுத்த கோரியும் கவுன்சிலர்கள் மாநகராட்சிக்கு புகார்கள் தெரிவித்து வந்தனர். அதன் அடிப்படையில் தெருநாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் 25 வது வார்டுக்கு உட்பட்ட சோளிபாளையத்தை அடுத்த ராம்நகரில் நேற்று பெண் ஒருவர் தனது 9 மாத குழந்தைக்கு சாப்பாடு கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தெரு நாய் ஒன்று திடீரென குழந்தையை தெரு நாய் கடித்தது. இதுபோல் 9 மற்றும் 7 வயது சிறுவர்கள், 50 வயது பெண் ஒருவர் என ஒரே நாளில் 4 பேரை கடித்தது. தொடர்ந்து பாதிக்கப்பட்ட அனைவரும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

Tags

Next Story