சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது

சூதாட்டத்தில் ஈடுபட்ட 4  பேர்  கைது

சூதாட்டம் 

ஆலிவலம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆலிவலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட கீரக்கனூர் மேல தெருவை சேர்ந்த திருஞானம் என்பவரின் மகன் புகழேந்தி தகரவெளி மேல தெருவை சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகன் சீனிவாசன், திருத்துறைப்பூண்டி நாடார் தெருவை சேர்ந்த ஜெயராமன் என்பவரின் மகன் கேசவன், நங்காலி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வைத்தியநாதன் என்பவரின் மகன் பாரதி ஆகிய நான்கு நபர்களை போலீசார் கைது செய்து சட்ட பூர்வ நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் அவர்களிடமிருந்து 200 ரூபாய் பணம் மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. சிறப்பாக செயல்பட்டு சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த ஆலிவலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் புஷ்பநாதன் மற்றும் காவலர்களை எஸ்.பி பாராட்டினார்.

Tags

Next Story