சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.40 லட்சம் பறிமுதல்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.40 லட்சம் பறிமுதல்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.40 லட்சத்தை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து ஞானவேல் என்கிற நபர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். வழக்கம்போல் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு படை போலிசாரும் சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளார்கள். அப்போது ஞானவேலிடம் சோதனை மேற்கொண்ட போது கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகளை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்துள்ளது தெரியவந்தது. அதனை சோதனை செய்தபோது 40 லட்சம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. உடனடியாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 40 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருப்பதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story