40 ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு போட்டி

40 ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு போட்டி

விளையாட்டு போட்டிகள் 

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த இலுப்பூரில் 40 ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு போட்டி நடைபெற்றது.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் இலுப்பூரில் 40 ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர் 200 மீட்டர் 1500 மீட்டர் ஓட்டம் சாக்கு ஓட்டம் உருளைக்கிழங்கு சேகரித்தல். ஊசி நூல் கோர்த்தல், ஸ்லோ சைக்கிள் ,பலூன் உடைத்தல் , இசை நாற்காலி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது பரிசு வழங்கும் விழாவிற்கு முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பையா தலைமை தாங்கினார் .முன்னாள் கிராம தலைவர்கள் பக்கிரி சாமி நடராஜன் கிராம தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகி மணி வரவேற்றார்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் தீபக், பழனிவேல், அரவிந்த், சிவா, தருண், ஐயப்பன்மனோகர், கதிரவன், செந்தில்குமார், சந்தோஷ் ,பிரவீன், ரகு, சக்திவேல் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர் முடிவில் இளைஞர் அணி ரகு நன்றி கூறினார்.

Tags

Next Story