429 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல்

429 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல்
வழங்கல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 429 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தகவல் கள்ளக்குறிச்சி மாவட்டம், அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் பையம் மற்றும் மகளிர் திட்டம் சார்பிள் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசார்த், தலைமையில் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் , ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் தொடங்கி வைத்து இம்முகாமில் தேர்வு பெற்ற வேலைநாடுநர்களுக்கு தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.
Next Story