4.5 கிலோ தங்கம் ஏர்போர்டில் சிக்கியது

4.5 கிலோ தங்கம் ஏர்போர்டில் சிக்கியது

தங்க கட்டிகள் 

சுங்க அதிகாரிகள் 3 கோடி ரூபாய் மதிப்பிலான 4.5 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்
சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ஒன்றான அபுதாபியில் இருந்து 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' பயணியர் விமானம், நேற்று அதிகாலை வந்தது. பின் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் செல்ல வேண்டும். அந்த விமானத்தை ஊழியர்கள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கழிப்பறையில் மின்சார ஒயர்கள் உள்ள 'கேபிள் பாக்ஸ்' திறந்த நிலையில் இருப்பதை பார்த்து, பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது அதில் 'பார்சல்' ஒன்று இருப்பது தெரிய வந்தது. சுங்க அதிகாரிகள் பிரித்து பார்த்த போது, 3 கோடி ரூபாய் மதிப்பிலான 4.5 கிலோ தங்க கட்டிகள் இருந்தன. தங்கம் கடத்தியோர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story