பொது மக்களுக்கு இடையூறாக சுற்றி திரிந்த 46 மாடுகள் பிடிப்பு

பொது மக்களுக்கு இடையூறாக சுற்றி திரிந்த 46 மாடுகள் பிடிப்பு

சாலையில் சுற்றி திரிந்த மாடுகள் 

முத்துப்பேட்டையில் பொது மக்களுக்கு இடையூறாக சுற்றி திரிந்த 46 மாடுகள் பிடிக்கப்பட்டன.
முத்துப்பேட்டை பகுதியில் இரவு நேரங்களில் பொது மக்களுக்கு இடையூறாக மாடுகள் சுற்றி திரிவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் தலைமையில் இரவு நேரத்தில் சுற்றி திரிந்த 46 மாடுகளை பிடித்தனர் .பிடிபட்ட மாடுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூபாய் 2000 அபராதம் விதிக்கப்பட்டு அவர்களிடம் மாடுகள் ஒப்படைக்கப்படும். உரிமையாளர் பெற்று செல்லாத மாடுகள் மயிலாடுதுறை மாடுகள் பாதுகாப்பாகத்தில் ஒப்படைக்கப்படும் என செயல் அலுவலர் தெரிவித்தார்.

Tags

Next Story