திருச்சியில் 48 வேட்பு மனுக்கள் தாக்கல்

திருச்சியில் 48 வேட்பு மனுக்கள் தாக்கல்

வேட்புமனு தாக்கல்

திருச்சி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 48 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் தங்களுடைய வேட்பு மனுக்களை கடந்த 20 ஆம் தேதி முதல் அந்தந்தத் தொகுதியில் உள்ள மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் தாக்கல் செய்தனா். புதன்கிழமை பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனுவுக்கான காலக்கெடு நிறைவடைந்தது. அதன்படி திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 48 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதில் புதன்கிழமை மட்டும் 29 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. ஒரே வேட்பாளா் இரு வேட்புமனுக்களும் மாற்று வேட்பாளா் மனுக்களும் வழங்கியுள்ளனா். பெறப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story