அமைச்சர்கள் முன்னிலையில் ₹499 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

திருச்சியில் அமைச்சர்கள் மகேஷ், டிஆர்பி ராஜா ஆகியோரது முன்னிலையில் 15 நிறுவனங்களுடன் ₹499 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024 சென்னையில் வருகின்ற ஜனவரி 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு திருச்சியில் முன்னோட்ட கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழில்துறை அமைச்சர் டாக்டர்.டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் 15 நிறுவனங்களுடன் ரூபாய் 499 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில், தொழில் துறை அரசு செயலர் அருண்ராய், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர், தலைமை நிர்வாக அலுவலர் விஷ்ணு, தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் மேலாண் இயக்குநர் செந்தில்ராஜ். உட்பட தொழில் துறையினர், வணிகர்கள், தொழில் முனைவோர், தொழில் வல்லுநர்கள், முதலீட்டார்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story