5 மணி நேரம் காத்திருந்து பால் ஊற்றி பக்தர்கள் நேர்த்திக்கடன்
Nagercoil King 24x7 |1 Sep 2024 1:53 PM GMT
நாகர்கோவிலில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நாகர்கோவில் நாகராஜா கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்த குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளா மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவர். இதில் ஆவணி ஞாயிற்றுக்கிழமை விஷேசம் என்பதால் இன்று அதிகாலையில் இருந்து வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் திரண்டனர். இதனால் கோயில் வளாகத்தின் வெளியேயும் நீண்ட வரிசையில் தலைமை தபால் நிலையம் வரை பக்தர்கள் 5 மணி நேரத்திற்கு மேல் காத்து நின்று நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி நேர்த்திகடன் செலுத்தினர்.
Next Story