5 கோடி மானியத்தில் 50 சிமெண்ட் சாலைக்கான பூமி பூஜையை செய்து வைத்து அமைச்சர்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஆவடிஜேபி எஸ்டேட்,திருமுல்லைவாயில்,மிட்னமல்லி, முத்தாபுதுப்பேட்டை, மணிகண்டபுரம் உள்ளிட்ட பகுதிகளான மண்டலம் 1ல் வார்டு எண் 1-ல் ராஜீவ் காந்தி நகர் 8 வது தெருவில் 5.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலையும்,2.வார்டு எண் 2-ல் சபீநகர் 1வது தெருவில் ரூபாய் 11.80 லட்சம் மதிப்பீட்டில் சாலை சீரமைக்கும் பணியினையும், 3வது வார்டு தேவி நகரில் சிமெண்ட் சாலையும், 4.வார்டு எண் 28 ல் மணிகண்டபுரம் 16வது குறுக்குத் தெருவில் சிமெண்ட் சாலையும், 5.வார்டு எண் 29 ல்சூரியகாந்தி தெருவில் சிமெண்ட் சாலையும். மண்டலம் எண் 3 ல் 6.வார்டு எண் 44 ல் குமரன் நகர் 2வது தெருவில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் 12.40 லட்சத்தின் பணியினை துவக்கி வைத்தார் வைத்தார் 7.வார்டு எண் 42 ஜேபி எஸ்டேட் 4 வது தெருவில் சிமெண்ட் சாலை அமைத்தல் பணியினை துவக்கி வைத்தார் மண்டலம் எண் 4ல் 8.வார்டு எண் 45 ல் தமிழ்நாடு நகர்ப்புறசாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் 15 புள்ளி 50 லட்சம் செலவில் முத்துக்குமரன் நகர் முதல் தெருவில் சாலையும்,9.வார்டு எண் 37 ல் தமிழ்நாடு நகர்ப்புறசாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் 34.50 இலட்சம் செலவில் சேக்காடு பள்ளர் சீரமைத்தல் பணியினை பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். மக்கள் நலத்திட்ட பணிகளுக்கிடையே காவல்துறை ஆய்வாளரிடம் தின்னர் கம்பெனி தீ விபத்து வழக்கு பதிவு விவரம் குறித்து விவரங்களை கேட்டறிந்தார் திருமுல்லைவாயில் மணிகண்ட புறத்தில் சிமெண்ட் சாலைக்கு பூமி பூஜை செய்து வைத்த பின் திருமுல்லைவாயில் காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லரை அழைத்து தனியார் பள்ளி அருகே தீ விபத்து ஏற்படுத்திய ஆசிட் கம்பெனி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ஏன் இன்னும் விட்டு வைத்து உள்ளீர்கள் என கேள்வி எழுப்பினர். நீங்கள் தாமதித்தால் யார் அந்த சார் என கேட்டு விடுவார்கள் உடனடியாக நடவடிக்கை எடுங்கள் எனவும் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
Next Story





