ரேஷன் அரிசி கடத்திய 5 பேர் கைது

ரேஷன் அரிசி கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் ரேஷன் அரிசி கடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் அனுராதா, சார்பு ஆய்வாளர் கார்த்திகேயன், தனிப்படை போலீசார் இசக்கி ராஜ், ஜெய்சிங் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் அருப்புக்கோட்டை தனியார் மில் கோடவுனில் 310 பாலீதின் பைகளில் 50 கிலோ வீதம் மொத்தம் 15,500 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி இரண்டு வேனில் கடத்த முயற்சித்த கோவில்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் 24, முத்துராஜ் 25, மாரியப்பன், ராஜாராம், திருநெல்வேலியைச் சேர்ந்த பேச்சிமுத்து உள்ளிட்டோரை கைது செய்தனர்.

கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு வேனையும் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய கலைஞர், கார்த்தி, முத்துமாரியப்பன், தர்மேந்திரன் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story