மரக்காணம் அருகே இடித்தாக்கி 3 பெண்கள் உட்பட 5 பேர் காயம்.

மரக்காணம் அருகே இடித்தாக்கி 3 பெண்கள் உட்பட 5 பேர் காயம்.

காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கந்தாடு ஊராட்சிக்குட்பட்ட புதிய தெரு பகுதியை சேர்ந்தவர்கள் லட்சுமி (39), அஞ்சலை தேவி (52 ), ஆதிகேசவன் (50), பூங்கோதை (34), தண்டபாணி (57). இவர்கள் அனைவரும் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள வயல்வெளிகளில் தங்களது ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்துள்ளனர், அப்போது கனமழையுடன் பலத்த இடியும் இடித்துள்ளது.

இதனால் இவர்கள் வயல்வெளி பகுதியில் இருந்த ஒரு சிறிய குடிசையின் அருகில் நின்று கொண்டிருந்துள்ளனர், அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக பலத்த சத்தத்துடன் இடி தாக்கி உள்ளது, இந்த இடியின் காரணமாக எழுந்த மின்னல் தாக்கி அதே இடத்தில் அனைவரும் மயங்கி விழுந்துள்ளனர், இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக இவர்களை மீட்டு மரக்காணத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர், அங்கு மருத்துவர்கள் இவர்கள் அனைவருக்கும் உடனடியாக தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மரக்காணம் தாசில்தார் பாலமுருகன் மற்றும் மரக்காணம் சேர்மன் தயாளன், விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களை மரக்காணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் வழங்கினர்.

Tags

Next Story