செல்லிவலசில் பணம் வைத்து சேவல் சண்டை நடத்திய 5 பேர் கைது.

செல்லிவலசில் பணம் வைத்து சேவல் சண்டை நடத்திய 5 பேர் கைது.

சேவல் சண்டை 

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, செல்லிவலசு பகுதியில் பணம் வைத்து, சேவல் சண்டை நடத்துவதாக காவல் உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், செல்லிவலசு பஸ் ஸ்டாப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதியில் உள்ள முள்தோட்ட பகுதியில் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சேவல் சண்டையில் ஈடுபட்ட பள்ளப்பட்டி அண்ணா நகரை சேர்ந்த நல்லசிவம், அரவக்குறிச்சி வடுகப்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், குரும்பபட்டியைச் சேர்ந்த சங்கர், ரங்கராஜ் நகரை சேர்ந்த ஜெகநாதன், தீரன் நகரச் சேர்ந்த வேல்முருகன் ஆகியோர் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டு, இதற்காக பயன்படுத்திய ரூ.100-யும் பறிமுதல் செய்த காவல்துறையினர், 5-பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, பின்னர் அவர்களை காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.

Tags

Next Story