பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது!

பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது!

பைல் படம் 

வந்தவாசி அருகே பணம் வைத்து சூதாடிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மழையூர் கிராமப் பகுதிகளில் உதவி காவல் ஆய்வாளர்கள் மோகன், ரமேஷ் ஆகியோர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மழையூர் கிராமத்தில் ஏரிக்கரையில் பணம் வைத்து சூதாடிய 5 பேரை வந்தவாசி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story