அரசு அனுமதியில்லாமல் மது, போலி லாட்டரி விற்ற 5 பேர் கைது !

அரசு அனுமதியில்லாமல் மது, போலி லாட்டரி விற்ற 5 பேர் கைது !
காவல்துறை
குமாரபாளையத்தில் அரசு அனுமதியில்லாமல் மது, போலி லாட்டரி விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் அரசு அனுமதியில்லாமல் மது, போலி லாட்டரி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது. எஸ்.ஐ.க்கள் தங்கவடிவேல், மாதேஸ்வரன், ஏட்டுக்கள் ராம்குமார், பார்த்திபன் உள்பட பலர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். மேட்டுக்கடை, கத்தாளபேட்டை, காந்திநகர், உள்ளிட்ட பகுதியில் போலி லாட்டரி விற்றதாக முத்துசாமி, 50, மேகநாதன், 30, ஈஸ்வரன், 48, ரவி, 45, ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு, வெள்ளை சீட்டுகளில் நெம்பர் எழுதப்பட்ட தலா 5 சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மது குடிக்க அனுமதி கொடுத்தமைக்காக, சேலம் கோவை புறவழிச்சாலை ஓட்டல் ஒன்றில் பணியாற்றிய பிரபாகரன், 34, என்பவரை கைது செய்தனர்.

Tags

Next Story