துக்கம் நடந்த வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு 5பேர் படுகாயம்

துக்கம் நடந்த வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு 5பேர் படுகாயம்

துக்கம் நடந்த வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு 5பேர் படுகாயம்

இளம்பிள்ளை அருகே துக்கம் நடந்த வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு 5பேர் படுகாயம் மருத்துவமனையில் அனுமதி.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை அடுத்த தூதனூர், பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு இவர் கடந்த 14-ம் தேதி சாலை விபத்தில் படுகாயம் அடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திருநாவுக்கரசு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு துக்கம் விசாரிக்க அவரது வீட்டில் பந்தல் அமைத்து லைட் கட்டிருந்தனர். அப்போது இவரது வீட்டு அருகே உள்ள உயரமான வாழைமரம் அவ்வழியே நெய்வேலி மேட்டூர் செல்லும் உயர் மின் கம்பி வாழை மரத்தின் மீது மோதியதில் பந்தல் லைட் ஒயர் மீது மின்சாரம் பாய்ந்தது வெடித்ததில் ஐந்துக்கு மேற்பட்ட வீடுகளில் மின் பொருட்கள் வெடித்து சிதறியது. மேலும் பந்தல் தீப்பிடித்து எறிந்தது.துக்கம் விசாரிக்க வந்த 5 பேர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தவர்களை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் துக்கம் விசாரிக்க வந்த உறவினர்கள் மீது மின்சாரம் பாய்ந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story