கருப்பசாமி கோவில் அருகே பணம் வைத்து சூதாடிய 5- பேர் கைது. ரூ.12,120 பறிமுதல்.

கருப்பசாமி கோவில் அருகே பணம் வைத்து சூதாடிய 5- பேர் கைது. ரூ.12,120 பறிமுதல்.

கோப்பு படம்

கருப்பசாமி கோவில் அருகே பணம் வைத்து சூதாடிய 5- பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், சிந்தாமணிப்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் கண்ணதாசனுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நேற்று மாலை 6:30- மணி அளவில், சிந்தாமணிப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது தெற்கு விராலிப்பட்டி, குளக்கரை, கருப்பசாமி கோவில் அருகே பணம் வைத்து சூதாடுவது கண்டறியப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட கடவூர் தாலுகா, வீரணம் பட்டியைச் சேர்ந்த தேவேந்திரன், கார்த்திக், ராஜலிங்கம், துரை மணிகண்டன், ராஜி ஆகிய 5- பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 12,120-ஐ பறிமுதல் செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story