பாபநாசம் அடுத்தடுத்து விபத்து - 5 பேர் படுகாயம்

பாபநாசம்  அடுத்தடுத்து விபத்து - 5 பேர் படுகாயம்

படுகாயம்

பாபநாசம் பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதி அடுத்தடுத்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் முதலியார் தெருவில் வசித்து வருவர் மார்ட்டின் அலெக்சாண்டர் வயது 42 இவர் பாபநாசத்தில் தனியார் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார் இவர் பாபநாசம் பழைய பேருந்து நிலையத்தில் ரோட்டை கடந்து டீ குடிபதற்க்காக நடந்து சென்றார்.

அப்போது தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஆரன் ஆடிக்காமலும் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் மார்ட்டின் மீது மோதி அதே சாலையில் வந்த இரண்டு மோட்டார் சைக்கிள் மீதும் மோதி அடுத்தடுத்து விபத்துக்களை ஏற்படுத்தினார் இந்த விபத்தில் மார்ட்டின் அலெக்சாண்டர் மோட்டார் சைக்கிளில்ஓட்டி வந்தவர்களான கபிஸ்தலம் சந்திரசேகரன் வயது 40, இராஜகிரி சாகுல் ஹமீதுவயது 19 , பண்டாரவாடை முகம்மது தவ்ஹீத் வயது 22 மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்தை ஏற்படுத்திய கச்சபத்து அஜய் வயது 20 ஆகியோர் பலத்த படுகாயம் அடைந்து பாபநாசம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story