தூங்கி கொண்டிருந்த நபரிடம் 5 பவுன் செயின் பறிப்பு

தூங்கி கொண்டிருந்த நபரிடம் 5 பவுன் செயின் பறிப்பு
செயின் பறிப்பு 
திருவண்ணாமலையில் தூங்கி கொண்டிருந்த நபரிடம் 5 பவுன் செயின் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை, ஆனைகட்டி தெருவை சேர்ந்த அருணகிரி (வயது 40) டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். அருணகிரி வீட்டின் திண்ணையில் படுத்து தூங்கி கொண்டிருந்த போது அவ்வழியாக சென்ற ஒரு மர்ம நபர் அருணகிரி கழுத்தில் அணிந்திருந்த சுமார் 5 பவுன் தங்க செயினை பறித்து தப்பி சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story