கஞ்சா விற்ற 5 வாலிபர்கள் கைது

கஞ்சா விற்ற 5 வாலிபர்கள் கைது

பைல் படம்

மன்னார்குடியில் அத்துமீறி கஞ்சா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
மன்னார்குடி கீழப்பாலம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது . போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த ஐந்து வாலிபர்களைப் பிடித்து சோதனை செய்துள்ளனர் . இதில் அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது .இதனை தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கடியாச்சேரி கோட்டகம் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார், ஆதிச்சபுரம் பகுதியை சேர்ந்த வீரக்குமார், மேலந்பனையூரைச் சேர்ந்த மதன்குமார், அற்புத ஜோதி மற்றும் மதுக்கூர் ரோடு பகுதியைச் சேர்ந்த சஞ்சய் ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர் . மேலும் அவர்களிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story