கஞ்சா விற்ற 5 இளைஞா்கள் கைது

கஞ்சா விற்ற 5 இளைஞா்கள் கைது

பைல் படம் 

முசிறியில் கஞ்சா விற்ற 5 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

முசிறி பகுதியில் தனிப்படை போலீஸாா் நடத்திய ஆய்வில் கஞ்சா விற்ற முசிறி கூடைமரக்கார தெரு முருகன் மகன் நித்தீஸ்வரன் (22), கீழ பள்ளம் பிச்சைமுத்து மகன் நாகராஜ் (25), பெரியாா் நகா் தங்கராஜ் மகன் மோகன் (25), மலையப்பபுரம் முருகானந்தம் மகன் ராஜேஷ் (19), கீழத்தெரு மோகன் மகன் சஞ்சய் (21) ஆகிய 5 பேரையும் கைது செய்து அவா்களிடமிருந்த 750 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா். ஸ்ரீரங்கத்தில்... கொள்ளிடம் பஞ்சக்கரை சாலை ரோட்டில் கஞ்சா விற்பதாக ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை தகவல் வந்தது.

இதையடுத்து போலீஸாா் சென்று அங்கு கஞ்சா விற்ற துறையூா் பகுதி கவிராஜா (22) அஞ்சான் (40) ஆகியோரை சுற்றி வளைத்துப் பிடித்தனா். அவா்களிடமிருந்து ஒன்றே கால் கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து அவா்களை கைது செய்தனா்.


Tags

Read MoreRead Less
Next Story