வானூர் அருகே 500 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள்சேதம்

வானூர் அருகே 500 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள்சேதம்

விழுப்புரத்தில் பெய்த கனமழை காரணமாக வானூர் அருகே, 500 ஏக்கர் விளைநிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சேதமடைந்தன. 

விழுப்புரத்தில் பெய்த கனமழை காரணமாக வானூர் அருகே, 500 ஏக்கர் விளைநிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சேதமடைந்தன.

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு தினங்களாக கனமழை கொட்டி தீர்த்தது இதில் விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் மற்றும் வானூர் ஆகிய வட்டங்களில் கனமழையின் அளவு அதிகமாக காணப்பட்டது இதில் அதிகபட்சமாக ஒரே நாளில் மரக்காணத்தில் 32 சென்டிமீட்டர் மழையும், வானூரில் 18 செண்டிமீட்டர் மழையும் கொட்டி தீர்த்தது, இதன் காரணமாக வானூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆங்காங்கே மழையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது.

இந்த நிலையில் வானூர் அடுத்த உப்புவேலூர், புதுப்பாக்கம், அறுவடை, எடச்சேரி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் விவசாயத்தையே முதன்மை தொழிலாக செய்து வந்தனர், இந்த நிலையில் பருவமழை முடிந்து, வழக்கம்போல் தங்களது விவசாயம் நிலங்களில் நெற்பயிரை விதைத்து அதை பராமரித்து வந்தனர், நெற்பயிரிகளும் வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்தபோது கடந்த இரண்டு தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக உப்புவேலூர், புதுப்பாக்கம், அறுவடை, எடச்சேரி ஆகிய கிராமங்களில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் முழுவதும் இடுப்பளவு தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்து.

இதனால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர், இதனால் அவர்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். எனவே அவர்களுக்கு தமிழக அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story