தந்தை பெரியாரின் 50 வது நினைவேந்தல் அனுசரிப்பு

தந்தை பெரியாரின் 50 வது நினைவேந்தல் அனுசரிப்பு

தந்தை பெரியாரின் 50 வது நினைவேந்தல் அனுசரிப்பு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை.

தந்தை பெரியாரின் 50 வது நினைவேந்தல் அனுசரிப்பு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை.
தர்மபுரி மாவட்டம், 24/12/2023. பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 50வது நினைவு நாளை முன்னிட்டு தர்மபுரியில் அரசியல் கட்சியினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பகுத்தறிவு தந்தை பெரியாரின் 50 வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தர்மபுரி நகரிலுள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு தர்மபுரியில் கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுக சார்பில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் வெற்றிவேல் தலைமையில் ஊர்வலமாக வந்து தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மைய மாவட்ட செயலாளர் பாண்டியன் தலைமையில் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மற்றும் திராவிடர் கட்சி, மதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags

Next Story