மயிலாடுதுறையில் 5.2 செ.மீ. மழை பதிவு

மயிலாடுதுறையில் 5.2 செ.மீ. மழை பதிவு

கனமழை 

மயிலாடுதுறை மாவட்டத்தில் நள்ளிரவில் மழை கொட்டி தீர்த்தது. வடகிழக்கு பருவ மழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்ட கடற்கரையோரங்களில் நேற்று பகலில் விட்டுவிட்டு மழை பெய்துவந்த நிலையில் நேற்று இரவில் மாவட்டம் முழுவதும் லேசான இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. தீபாவளியை முன்னிட்டு மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோயில், செம்பனார்கோவில் போன்ற ஊர்களினா கடை வீதிகளில் தரைக்கடை அமைத்து வியாபாரம் செய்து வந்தவர்களது வியாபாரம் பாதித்தது. மாவட்டம் முழுவதும் சம்பா, தாளடி விவசாயம் மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கு இந்த மழை வரப் பிரசாதமாக அமைந்துள்ளது. நேற்றிலிருந்து இன்று விடியற்காலை வரை பெய்த மழை அளவு. மயிலாடுதுறை 5.2 சென்டிமீட்டர், சீர்காழி 4.8 சென்டிமீட்டர், மணல்மேடு 3.1 சென்டிமீட்டர், கொள்ளிடம் 2.8 சென்டிமீட்டர் செம்பனார்கோவில் 3.22 சென்டிமீட்டர் ஆகும். இன்று காலை 6:00 மணி முதல் வானம் மேகமூட்டமாகவே உள்ளது.

Tags

Next Story