மார்த்தாண்டத்தில் 520 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் 

மார்த்தாண்டத்தில் 520 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் 
பறிமுதல் செய்த புகையிலை பொருட்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மார்க்கெட் பின்பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் அந்தப் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு செருப்பு கடைக்கு அருகில் உள்ள குடோனில் சோதனை போது 520 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், இவற்றை ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சங்கர்லால் என்பவர் பதுக்கி வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் கடத்தி வந்து கடைகளில் விற்பனை செய்வதாகவும் தெரியவந்துள்ளது. புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story