நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உட்பட 54 பேர் கைது

திருச்சியில் பிரச்சாரத்திற்காக ஊர்வலமாக செல்ல முயன்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மற்றும் நிர்வாகிகள் உட்பட 54 பேரை போலீசார் கைது செய்தனர்

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜேஷ் போட்டியிடுகிறார். இவர் கடந்த சில நாட்களாக திருச்சி தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் இந்த நிலையில் வேட்பாளர் ராஜேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் நேற்று திருச்சி தென்னூர் உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையோரம் அமைந்துள்ள மொழிப்போர் தியாகிகளின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக பிரச்சாரத்துக்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர்.

இதற்காக நேற்று காலை ராஜேஷ் மட்டும் நிர்வாகிகள் ஏராளமானவர் அங்கு திரண்டனர் இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த தில்லைநகர் போலீசார் அவர்களிடம் முறையான அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக கூடியது தவறு என்றும் அனுமதி இன்றி ஊர்வலமாக செல்லக்கூடாது எனக் கூறி கலைந்து செல்ல இதனால் போலீஸா இருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு வந்த வேட்பாளர் ராஜேஷ் உட்பட 54 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story