ஓமலூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு 596183.91ரூபாய்க்கு ஏலம்

ஓமலூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு 596183.91ரூபாய்க்கு ஏலம்
சேலம் மாவட்டம்,ஓமலூரை அடுத்த மேச்சேரி பிரிவு ரோடு பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த இரண்டு நாட்களாக 21விவசாயிகள் 161மூட்டைகளில் 71.08குவிண்டால் அளவிற்கு தேங்காய் பருப்புகளை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்தனர். அப்படி கொண்டு வந்த தேங்காய் பருப்புகள் ஏலம் விடப்பட்டது. இதில் மொத்தம் 5லட்சத்து 96 ஆயிரத்து 183ரூபாய் 91காசுகளுக்கு ஏலம் போனது. அப்படி ஏலம் போன தேங்காய் பருப்புகளை 4வியாபாரிகள் வாங்கி சென்றதாக வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஆனந்தி தகவல் தெரிவித்தார்.

Tags

Next Story