ரூ.6லட்சம் நகை திருட்டு: கடை ஊழியருக்கு போலீஸ் வலைவீச்சு!

ரூ.6லட்சம் நகை திருட்டு: கடை ஊழியருக்கு போலீஸ் வலைவீச்சு!
தென்தாமரை குளம் அருகே வீட்டை உடைத்து நகை திருட்டு
தூத்துக்குடியில் ரூ.6லட்சம் நகை திருட்டு: கடை ஊழியரை போலிசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடியில் நகை பாலிஷ் போடும் கடையில் ரூ.6லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிய ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி டி.ஆர்., நாயுடு தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் மகன் பிரவீன் (43). இவர் அப்பகுதியில் நகை பாலிஷ் போடும் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் 4 மாதங்களுக்கு முன்னர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பகீர் உதயன் (26) என்பவர் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் கடையில் இருந்த 200 கிராம் தங்க நகைகளை திருடிச் சென்றுவிட்டாராம். இதன் மதிப்பு ரூ.6லட்சம் ஆகும். இதுகுறித்து மத்தியபாகம் காவல் நிலையத்தில் பிரவீன் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story