6 வயது மகனை எரித்து கொலை செய்த தாய்க்கு அதிரடி தீர்ப்பு
பூந்தமல்லியில் 6 வயது மகனை எரித்து கொலை செய்த தாய்க்கு ஆயுள் தண்டனை, பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு தீர்ப்பளித்த பின்பு தன்னை காப்பாற்றுமாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் காலில் விழுந்த பெண் குற்றவாளி சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே கரையான்சாவடியைய் சேர்ந்தவர் மீனாட்சி(27), இவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த சரவணன்(34), என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜெயகாந்த்(6), என்ற மகன் இருந்தார். மீனாட்சி குடும்பத்துடன் கிருஷ்ணகிரியில் வசித்து வந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கணவரிடம் சண்டை போட்டு விட்டு கரையான்சாவடியில் உள்ள தாய் வீட்டிற்கு மீனாட்சி வந்து விட்டார். தாய் வீட்டிலும் யாரும் அவருடன் சரிவர பேசாததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதையடுத்து மகனை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று மீனாட்சி முடிவு எடுத்துள்ளார். பின்னர் தனது 6 வயது மகன் ஜெயகாந்த்தின் முகத்தில் தலையனையால் அழுத்தி கொலை செய்து உடலை எரித்து வீட்டின் அருகே இருந்த கால்வாயில் வீசி உள்ளார். கால்வாயில் இருந்து துர்நாற்றம் வருவதாக அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் . தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த ஜெயகாந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர் . போலீசார் விசாரணையில் மகனை கொலை செய்ததை மீனாட்சி ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 2ல் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் புரட்சிதாசன் ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கினார். இதில் மீனாட்சி தனது மகனை கொலை செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தாய் மீனாட்சிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்தார். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் மீனாட்சி புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக புரட்சிதாசன் நீதிமன்றத்தில் வழக்காடி தண்டனையை பெற்று தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக தீர்ப்பு வழங்கிய நிலையில் தன்னை காப்பாற்றுமாறு காவல் ஆய்வாளர் காலில் மீனாட்சி விழுந்து கேட்டு கொண்டது குறிப்பிடத்தக்கது.
Next Story



