6 வயது மகனுடன் இளம் பெண் மாயம்

6 வயது மகனுடன் இளம் பெண் மாயம்
X
பேச்சிப்பாறை
குமரி மாவட்டம் மோதிரமலை பகுதியை  சேர்ந்தவர் ராஜேஷ்  மனைவி பிரியா (28). இவர்களுக்கு 6வயதில் மகன் உள்ளார்.  கடந்த 5 மாதங்களாக பிரியா நாகர்கோவில் பகுதியில் ஒரு வலை  கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சம்பவ தினம் பிரியா தனது மகனுடன் பொருட்கள் வாங்க பேச்சிப்பாறை  சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. மகனையும் காணவில்லை. இது குறித்து ராஜேஷ் பேச்சிப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story