மர்ம விலங்கு கடித்து 6ஆடுகள் உயிரிழப்பு

மர்ம விலங்கு கடித்து 6ஆடுகள் உயிரிழப்பு
ஓமலூர் அருகே மர்ம விலங்கு கடித்து 6ஆடுகள் உடல் சிதைந்த நிலையில் உயிரிழந்தன.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளபிள்ளையார் கோயில் பகுதியில் வசிக்கும் ரங்கசாமி என்ற விவசாயி வளர்த்து வந்த 6 செம்மறி ஆடுகளை மர்ம விலங்கு கடித்து கொடூரமான முறையில் உயிரிழந்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் கால்நடை மருத்துவர் உதவியுடன் ஆடுகளையும் பிரேத பரிசோதனை செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story