கார் திருட்டில் ஈடுபட்ட 6 பேர் கைது

கார் திருட்டில் ஈடுபட்ட 6 பேர் கைது

காவல் நிலையம் 

வேளாங்கண்ணி அருகே காரை திருடி சென்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தெற்கு பொய்கை நல்லூர் தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் அன்பழகன் வயது 52 இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சியை சேர்ந்த சையது என்பவரிடமிருந்து ரூபாய் 8 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள சொகுசு காரினை வாங்கி உள்ளார். இந்த நிலையில் அன்பழகன் காரினை தனது பெயருக்கு மாற்றம் செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றபோது சொகுசு காரில் இருந்த இன்ஜின் மற்றும் சேஸ் நம்பர்கள் முரண்பாடாக இருந்துள்ளது இதுகுறித்து அன்பழகன் சையது இடம் கேட்டு உள்ளார்.

இந்த நிலையில் பிப்ரவரி 15 சனிக்கிழமை இரவு 11:30 மணிக்கு சையது ஒரு ஆறு பேரை அனுப்பி காரை எடுத்து வர சொல்லி உள்ளார். இதன் பேரில் அவர்கள் வீட்டிற்கு வந்து வாசல் நிறுத்தி வைத்திருந்த காரினை திருடி சென்றுள்ளனர். இது தொடர்பாக அன்பழகன் வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நாகை மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகளுக்கு அறிவுறுத்தினர் இந்த நிலையில் நாகை திருவாரூர் மாவட்ட எல்லையில் உள்ள ஒரு சோதனை சாவடியில் திருடி செல்லப்பட்ட காரை போலீசார் மடக்கி பிடித்தனர் .அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் காரை திருடி சென்றது திருப்பத்தூரை சேர்ந்த சுதாகர் சென்னை சேர்ந்த சங்கர் திருப்பத்தூரை சேர்ந்த மணிகண்டன் திருவண்ணாமலையை சேர்ந்த சுகுமார் திருப்பத்தூரை சேர்ந்த விக்னேஷ் மற்றும் சரண் கிஷோர் என்பதை தெரியவந்தது .இது தொடர்பாக வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து கார் திருட்டில் ஈடுபட்ட ஆகிய ஆறு பேரை கைது செய்தனர்

Tags

Next Story