வீரவள்ளி அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது !

வீரவள்ளி அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது !

சூதாட்டம்

வீரவள்ளி அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது. ரூபாய் 200 பறிமுதல். காவல்துறை நடவடிக்கை.
வீரவள்ளி அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது. ரூபாய் 200 பறிமுதல். காவல்துறை நடவடிக்கை. கரூர் மாவட்டம், லாலாபேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் தங்கசாமிக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், மார்ச் 17ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில், லாலாபேட்டை காவல் எல்லைக்குட்பட்ட வீரவள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அருகில் உள்ள மங்கம்மா சாலையில் பணம் வைத்து சூது ஆடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரவள்ளியைச் சேர்ந்த மகேந்திரன், ரஞ்சித், பால்ராஜ் ,சந்தோஷ், கே.புதுப்பட்டி சேர்ந்த சசி, சீகம்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் ஆகிய ஆறு பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 200 ஐயும் பறிமுதல் செய்தனர் காவல்துறையினர். பின்னர் ஆறு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, அவர்களை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் லாலாபேட்டை காவல் துறையினர்.

Tags

Next Story