ஆட்டோவில் கஞ்சா கடத்திய 6 பேர் கைது

ஆட்டோவில் கஞ்சா கடத்திய 6 பேர் கைது
கஞ்சா கடத்தியவர்கள் கைது
காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து சோதனையில் ஈடுப்பட்ட நிலையில் 300 கிராம் கஞ்சா பாக்கெட்டுகள், ரூ.2950 ரொக்கப் பணம் ஆகியவற்றை கைப்பற்றினர்
திருவையாறு, தேரடியில் தஞ்சை வடக்கு அலங்கத்தை சேர்ந்த அய்யனார் மகன் வடிவேல் என்பவரது ஆட்டோவில் தஞ்சை கீழவாசலை சேர்ந்த குமார் மனைவி சித்ரா(44), பெரிய சாமி மகன் மணிகண்டன் (37), உள்ளிக்கடையை சேர்ந்த ராஜா மகன் ஜெயந்த் ரஜினி (19), பசுபதிகோவில் புல்லமங்கையை சேர்ந்த கணேசன் மகன் இளைய ராஜா (19), அய்யம்பேட்டை நியூடவுன் நகரை சேர்ந்த ரமேஷ் மகன் கவின்(19), திருவையாறை சேர்ந்த கௌதமன் மகன் கோவிந்தன் (23) ஆகியோர் கஞ்சா வைத்துக்கொண்டு விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. காவல் உதவி ஆய்வாளர் ராஜ்மோகன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது, காவலர்கள் வருவதை பார்த்த ஆட்டோ டிரைவர் வடிவேல் தப்பி ஓடிவிட்டார். மற்றவர்களை பிடித்து சோதனை செய்தபோது அவர்களிடமிருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சா பாக்கெட்டுகள், ரூ.2950 ரொக்கப் பணம், எடை மிஷின், டிஜிட்டல் ஸ்கேல் ஆகியவற்றை பறிமுதல் செய்து 6 பேரையும் கைது செய்து வழக்கு தொடந்தனர்.

Tags

Next Story