ஆடு திருடிய 6 பேர் கைது - 3 மோட்டார் சைக்கிள் பறிமுதல் !!

ஆடு திருடிய 6 பேர் கைது - 3 மோட்டார் சைக்கிள் பறிமுதல் !!

 கைது

ஏரல் அருகே ஆடு திருடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள வாழவல்லான் கீழூரை சேர்ந்தவர் குமரேசன் (60). இவரது வீட்டில் கடந்த 21-ந்தேதி இரவு வீட்டில் கட்டப்பட்டிருந்த 4 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து அவர் ஏரல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டேனியல் தாமஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் அவர் தலைமையில் போலீசார் நேற்று ஏரல் தாமிரபரணி ஆற்றங்கரை ஓரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போதூ 3 மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் போலீசை பார்த்தவுடன் திருப்பி கொண்டு தப்பி ஓடமுயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில், வாழவல்லான் கீழூர் அம்மன் கோவில் தெரு இசக்கிமுத்து மகன் சிவபிரகாஷ் (வயது 20). மஞ்சள் நீர்காயல் வடக்கு தெருவை சேர்ந்த 17 வயது சிறுவன், மஞ்சள் நீர்காயல் வடக்கு புது காலனி தெருவை சேர்ந்த 16 வயது வாலிபர், கொற்கை மகாத்மா காந்தி தெரு மாரியப்பன் மகன் சுரேஷ் (20), கொற்கை மகாத்மா காந்தி தெரு ராமர் மகன் மணிகண்டன் (19), மஞ்சள் நீர்காயல் வடக்கு புது காலனி தெருவை சேர்ந்த 16 வயது சிறுவன் என தெரிய வந்தது. தொடர் விசாரணையில் குமரேசன் வீட்டில் 4 ஆடுகளை திருடியது ஒப்புக்கொண்டனர். இதை தொடர்ந்து அந்த 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 ஆடுகள் மீட்கப்பட்டது. திருட பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story