பெட்ரோல் குண்டு வீசிய 6 பேர் கைது

ஓமலூர் அருகே பெட்ரோல் குண்டு வீசிய 6 பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள நாரணம்பாளையம் ஊராட்சி அன்னை ஜெயராக்கினி நகரை அடுத்த மாதா கோவில் தெருவை சேர்ந்த அந்தோணிசாமி மகன் பெரியநாயகம். அவரது வீட்டின் அருகே நேற்று முன்தினம் இரவு மூன்று இளைஞர்கள் பதிவெண் இல்லாமல் ஒரு இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்துள்ளனர். அப்பொழுது அவர்களை நிறுத்தி இங்கு குழந்தைகள் அதிகமாக நடமாடும் இடம் கொஞ்சம் மெதுவாக செல்லுங்கள் என கூறியுள்ளார். அதற்கு அந்த இளைஞர்கள் அவரை தகாத வார்த்தைகளால் திட்டிய பின்பு அங்கிருந்து சென்ற பின் மீண்டும் அதே இடத்திற்கு இரண்டு இரு சக்கர வாகனத்தில் ஆறு பேர் கொண்ட கும்பல் வந்து தட்டி கேட்ட பெரியநாயகம் வீடு மற்றும் சாலைகளில் பெட்ரோல் குண்டு வீசி சென்றனர். இதையடுத்து சம்பவம் குறித்து பெரியநாயகம் கொடுத்த புகாரின் பேரில் ஓமலூர் போலீசார் சம்பவத்தில் ஈடுபட்ட காமலாபுரம் கலர்காடு பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் நந்தகுமார், சாரதி, கோபாலகிருஷ்ணன், சந்தோஷ்குமார் மற்றும் சிறுவர்கள் 2 பேர் உட்பட 6 இளைஞர்களை பிடித்து ஓமலூர் போலீசார் சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story