நகை கொள்ளை வழக்கில் 6பேர் கைது: நகைகள் மீட்பு!

நகை கொள்ளை வழக்கில் 6பேர் கைது: நகைகள் மீட்பு!

கைது

தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 36 பவுன் நகைகளை கொள்ளையடித்த சம்பவத்தில் 2 சிற்றார்கள் உட்பட 6பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி அய்யயாசாமி காலனியைச் சேர்ந்தவர் அசரியா மனைவி எஸ்தர் (52). இவர் கடந்த 26 ஆம் தேதி கோயமுத்தூரில் உள்ள உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கோயமுத்தூர் சென்றுவிட்டு நேற்று காலை ஊர் திரும்பினார்.

அப்போது அவரது வீட்டில் உள்ள கதவில் பூட்டுகள் உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 36 பவுன் நகைகள் திருடு போயிருந்தது. இதன் மதிப்பு 13 லட்சம் ஆகும். இதுகுறித்து எஸ்தர் சிப்காட் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சேகர் மகன் சந்திரன் (20), தேவராஜ் மகன் சந்தோஷ்குமார் (21), சந்திரன் மகன் அருள் ராஜ் (19), மேட்டுப்பட்டி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ஆரோக்கியம் மகன் ஹரிபிரகாஷ் (23), மற்றும் 2 இளம் சிறார்கள் உட்பட 6பேரை போலீசார் கைது செய்து திருடப்பட்ட நகைகளை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story