பசுவந்தனை அருகே பணம் வைத்து சீட்டு விளையாடிய 6 பேர் கைது

பசுவந்தனை அருகே பணம் வைத்து சீட்டு விளையாடிய 6 பேர் கைது

கோப்பு படம் 

பசுவந்தனை அருகே சட்டவிரோதமாக பணம் வைத்து சீட்டு விளையாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை காவல் நிலைய ஆய்வாளர் முத்துமணி தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் மார்த்தாண்ட பூபதி மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது துரைசாமிபுரம் பகுதியில் உள்ள ஒரு பழைய கட்டிடத்தில் சிலர் சட்டவிரோதமாக பணத்திற்காக சீட்டு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து சீட்டு விளையாடிய கே. சண்முகபுரத்தைச் சேர்ந்த திருமால் மகன் சுப்புராஜ் (60), காட்டுநாயக்கன்பட்டியைச் சேர்ந்த திருவளர்செல்வன் மகன் கணேசன் (49) எப்போதுவென்றான் பகுதியைச் சேர்ந்த செல்லசாமி மகன் முருகன் (38), ஏ.குமார ரெட்டியா புரத்தைச் சேர்ந்த சண்முகசாமி மகன் பால்ராஜ் (63) தெற்கு வீரபாண்டிய புரத்தைச் சேர்ந்த துரைராஜ் மகன் ஜெயகிருஷ்ணன் (45) மற்றும் எப்போதும் வென்றான் பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் லிங்கராஜ் (56) ஆகிய 6 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து சீட்டுக்கட்டுகள், ரொக்கப்பணம் ரூ.12,000 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

லின்மேலும் இதுகுறித்து பசுவந்தனை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story