மொபெட்டில் சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு

மொபெட்டில் சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு

நகை பறிப்பு 

திருச்சியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற மத்திய அரசு அலுவலக பெண் ஊழியரின் கழுத்தில் இருந்து 6 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி, கேகே நகா் அருகேயுள்ள கக்கன் காலனியைச் சோ்ந்தவா் நடராஜன் மனைவி ஷீபா (32). திருச்சி மண்டல கடவுச்சீட்டு அலுவலக ஊழியரான இவா் நேற்று முன்தினம் இரவு திருச்சி மன்னாா்புரம் பகுதி உணவகத்துக்கு மகனுடன் சென்றுவிட்டு மொபெட்டில் வீட்டுக்குப் புறப்பட்டாா். மன்னாா்புரம் ரவுண்டானா பகுதி கேகே நகா் செல்லும் இணைப்புச் சாலையில் சென்றபோது பைக்கில் வந்த மா்ம நபா்கள் ஷீபா அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினா். புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Tags

Next Story