செங்கல்பட்டில் 6 தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

செங்கல்பட்டில் 6 தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

செங்கல்பட்டில் 6 தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

செங்கல்பட்டில் 6 தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கனமழை, வெள்ள பாதிப்பு காரணமாக செங்கல்பட்டில் உள்ள 6 தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நாளையும்(டிச. 7) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான மிக்ஜம் புயல் தமிழகத்தில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் எதிர்பாராத தொடர் கனமழையால் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடரந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு மற்றும் திருக்கழக்குன்றத்தில் தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நாளையும்(டிச.7, வியாழக்கிழமை) விடுமுறை தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags

Next Story